நான் ரசித்த சொல் நயம்/பொருள் நயம் மிக்க வரிகள்-
அலையிலே மலைமிதக்க
(கடவுள் வணக்கம் - சைவசமயாசாரியர் நால்வருள் மூவர்)
பைவளைத்துக் கிடக்குமிவன் மெய்வளையும் பாம்புகட்குப் பசியாதோ தென்றலைத்தான்
புசியாதோ என்பர்
(உலாக்காணவந்த பெண்கள் சொல்லுதல்)
குழை ஏறி யாடி நெஞ்சைச் சூறை யாடும்விழிக் கெண்டையாள் (வசந்தவல்லியினது அழகின் சிறப்பு)
துடிக்குள் அடங்கியொரு பிடிக்குள் அடங்குஞ்சின்ன இடையினாள்
(வசந்தவல்லியினது அழகின் சிறப்பு)
பையை விரிக்கு தம்மா பாம்புசும்மா (வசந்தவல்லி வியந்து கூறுதல்)
பெண்கள் கருத்துருக்க வந்தானோ (தோழியார், திருக்குற்றாலநாதர் புகழைக் கூறக் கேட்டு வசந்தவல்லி காதல் கொள்ளுதல் )
வாகனைக்கண்டுருகுதையோ ஒரு மயக்கமதாய் வருகுதையோ (தோழியார், திருக்குற்றாலநாதர் புகழைக் கூறக் கேட்டு வசந்தவல்லி காதல் கொள்ளுதல்)
சங்க வீதியிற் சங்கம் தோற்றாள் (வசந்தவல்லி நிலைமைகண்டு தோழிமார் புலம்பல்)
விளையாடாள் பாடாள் வாடாமாலை சூடாள் காண்
பேசிடாத மோசம் என்ன மோசமோ என்பர் (வசந்தவல்லி நிலைமைகண்டு தோழிமார் புலம்பல்)
கருகு தேயுடல் உருகுதே
(வசந்தவல்லியைப் பாங்கிகள் உபசரித்தல்)
தண்ணிலாக் கொடும்பாவி வெண்ணிலாவே (வசந்தவல்லி நிலவைப் பழித்துரைத்தல்)
நித்திரை தானொரு சத்துரு வாச்சுதே (வசந்தவல்லி மன்மதனைப் பழித்துரைத்தல் )
மெய்யர்க்கு மெய்யர்
(வசந்தவல்லி, பாங்கிக்குச் சொல்லுதல்)
குளிர் திங்கட்கொழுந்தையும் தீக்கொழுந்தாக்கிக் கொண்டேனே (வசந்தவல்லி, பாங்கிக்குச் சொல்லுதல்)
சங்கக் குழையாரைச் சங்க மறுகினிற் கண்டுஇரு செங்கைக்குள் சங்கமுஞ் சிந்தி மறுகிவிட்டேனே (வசந்தவல்லி, பாங்கிக்குச் சொல்லுதல்)
சிறு தென்றற் குழவி தினங்கோட்டக் கொட்ட நொந்தேனே (வசந்தவல்லி, பாங்கிக்குச் சொல்லுதல்)
வெள்ளி விடையில் வியாளம் புனைந்தாரைக் கண்டு சிந்தை நள்ளிய திங்களை ஞாயிறு போலக் கண்டேனே (வசந்தவல்லி, பாங்கிக்குச் சொல்லுதல்)
அஞ்சு தலைக்குள் ஆறுதலை வைத்தார் எனது மனதில் அஞ்சு தலைக்கோர் ஆறுதலைவையார் (வசந்தவல்லி வருந்திக் கூறுதல்)
வந்தால்இந் நேரம்வரச் சொல்லு வரா திருந்தால்
மாலையா கிலுந்தரச் சொல்லு குற்றாலநாதர்
தந்தாலென் நெஞ்சைத்தரச் சொல்லு தராதி ருந்தால்
தான்பெண் ணாகியபெண்ணை நான்விடேன் என்று (வசந்தவல்லி, பாங்கியைத் திருக்குற்றாலநாதர் முன் தூதுனுப்புதல்)
கஞ்சனைமுகில் மஞ்சனை நொடித்தவர்
காமனைச்சிறு சோமனை முடித்தவர் (வசந்தவல்லி கூடலிழைத்தல்)
ஏரிநீர் செழிக்க வாரிநீர் கொழிக்கும் மாரிநீர் வளர் (குறிசொல்லும் குறத்தி வருதல்)
குழல் வாய்மொழி அருட்கண்
கோலவண் டிணங்குங் கொன்றைமா லிகையான் (குறிசொல்லும் குறத்தி வருதல்)
வஞ்சி எழில்அப ரஞ்சி வரிவிழி
நஞ்சி முழுமற நெஞ்சி (குறிசொல்லும் குறத்தி வருதல்)
நீடுமலைமயில் ஆடு மலைமதி
மூடு மலைதிரி கூடமலைக்குற. (வஞ்சி) (குறிசொல்லும் குறத்தி வருதல்)
துவளும் இடைத் தவள நகை பவள இதழ்த் தையலே (வசந்தவல்லி குறத்தியைக்கண்டு மலைவளங் கேட்டல்)
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும் (குறத்தி மலைவளங்கூறுதல்)
அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும் (குறத்தி மலைவளங்கூறுதல்)
காமனார் தமக்கும்இவர் மாமனார் அம்மே! (குறத்தி, திரிகூடநாதர் கினைச்சிறப்புக் கூறுதல்)
கக்கத்தில் இடுக்குவாயோ வெட்கத்தை அம்மே (குறத்தி சொல்லுதல் - பாடல் 79)
ஞாளிபோல் சுவடெடுத்துப் பூனைபோல்
ஒளிபோட்டு நரிபோற் பம்மிக்
கூளிபோல் தொடர்ந்தடிக்கும் (சிங்கன் தன்வலிமை கூறுதல்)
சென்னியி லேபுனற் கன்னியை வைத்த (சிங்கன், பறவைகள் வரவு கூறுதல் )
கண்ணிற் கண்டிடம் எல்லாம் அவளாகத் தோணுதே பாவியே (சிங்கன், சிங்கியை நினைத்துப் புலம்பல்)
வவ்வால் பறக்க மரநாய் அகப்பட்ட வைபவம் ஆச்சுது தானே; (சிங்கன், சிங்கியைத் தேடிக் காணாமல் வருந்துதல்)
ஒருக்கால் ஊடிக்கொள்ள இருக்காற் கூடிக் கொள்ள. (சிங்கன், சிங்கியைக் காணுதல்)
கண்டாடித் துள்ளாடிக் கள்ளாடும் தும்பியைப் போற்
கொண்டாடிக் கொண்டாடிக் கூத்தாடிக் கொண்டானே (சிங்கன், சிங்கியை மகிழ்வித்தல்)
ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறார்களோ சிங்கா! (சிங்கனும் சிங்கியும் எதிர்த்துரையாடல்)