செவ்வாய், 15 நவம்பர், 2016

வீழுநர்

வீழுநர் என்பது தான் எவ்வளவு அழகான சொல். காதலில் வீழ்ந்தவர் (விழுந்தவர்), காதலில் தொபுக்கட்டீரென தலைக்குப்புற விழுந்தவர் :)

இதோ இக்குறளில் வள்ளுவர் எப்படி கையாண்டிருக்கிறாரென பாருங்கள்:

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழ்நர் கண்ணே இனிது.

சொற்பொருள்:
புலவி - ஊடல்
வீழுதல் - விழுதல்,  ஆசை, ஆசைப்பெருக்கம்.
விழுதல் -விருப்பங்கொள்ளுதல்.
வீழுநர் - விருப்பம் கொண்டவர். (அனுப்புதல் - அனுப்புநர், இயக்குதல் - இயக்குநர் அது போல)

புலவி கூட எங்கே இனிக்கும், இன்பம் பயக்கும் எனத் தெரியுமா? எப்படி நிழலுக்கு அருகே இருக்கும் நீர், குளிர்ந்த தண்ணீராய் பருக இனிக்கிறதோ, அது போலத் தான் அன்பிற்கினிய காதலருடன் கொள்ளும் ஊடல் தான் இன்பமானதாக இருக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக