என்றும் மூவா முகுந்தனுக்கு இளையவளே
இளையவளே - என்றால் என்றாவதொரு நாள் மூப்படையாலாம் இல்லையா.
என்றும் இளையவளே - என்றால் நீ மட்டும் எப்படி "என்றும் இளையவளாக" இருக்கமுடியும்னு யாராவது சண்டைக்கு வரலாம் இல்லையா.
அதே "என்றும் மூவா முகுந்தனுக்கு இளையவளே" என்றால் எந்த பிரச்சனையும் இல்லை :)
"அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்" என்கிற மாதிரி முகுந்தனுக்கு மூப்பு வந்தால் அபிராமியும் மூப்படையாலாம். ஏற்கனவே ஒருவன் மூப்படையாமல் இருக்கிறான் அதனால் இது ஒன்றும் புதிதில்லை.
அது நிற்க.
திடீரென்று பட்டர் ஏன் அபிராமியை இளையவளே என்று அழைக்கிறார்? அதற்கு முன் தான் "கறை கண்டவனுக்கு மூத்தவளே" என்கிறார். ஒருவேளை அபிராமி (பெண்ணல்லவா) வயதை அதிகமாக இருக்குமாறு சொன்னவுடன் கோவித்துக்கொள்வாளோ என்னமோ என்று உடனே இளையவளே என்கிறாரோ என்னமோ :)
இங்கு மூத்தவளே எனும் போது மேலானவள் என்றே பொருள் படும்படி வருமென்று எனக்கு தோன்றுகிறது. கறைகண்டவனுக்கு மூத்தவளே - நீலகண்டனுக்கே விசத்தை முறித்த மேலானவளே!
- அபிராமி அந்தாதி
இளையவளே - என்றால் என்றாவதொரு நாள் மூப்படையாலாம் இல்லையா.
என்றும் இளையவளே - என்றால் நீ மட்டும் எப்படி "என்றும் இளையவளாக" இருக்கமுடியும்னு யாராவது சண்டைக்கு வரலாம் இல்லையா.
அதே "என்றும் மூவா முகுந்தனுக்கு இளையவளே" என்றால் எந்த பிரச்சனையும் இல்லை :)
"அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்" என்கிற மாதிரி முகுந்தனுக்கு மூப்பு வந்தால் அபிராமியும் மூப்படையாலாம். ஏற்கனவே ஒருவன் மூப்படையாமல் இருக்கிறான் அதனால் இது ஒன்றும் புதிதில்லை.
அது நிற்க.
திடீரென்று பட்டர் ஏன் அபிராமியை இளையவளே என்று அழைக்கிறார்? அதற்கு முன் தான் "கறை கண்டவனுக்கு மூத்தவளே" என்கிறார். ஒருவேளை அபிராமி (பெண்ணல்லவா) வயதை அதிகமாக இருக்குமாறு சொன்னவுடன் கோவித்துக்கொள்வாளோ என்னமோ என்று உடனே இளையவளே என்கிறாரோ என்னமோ :)
இங்கு மூத்தவளே எனும் போது மேலானவள் என்றே பொருள் படும்படி வருமென்று எனக்கு தோன்றுகிறது. கறைகண்டவனுக்கு மூத்தவளே - நீலகண்டனுக்கே விசத்தை முறித்த மேலானவளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக