வட்டார வழக்குகள் தான் பல சொற்களைக் கட்டிக்காத்து வருகின்றன என நினைக்கிறேன்.
எ.கா:
1. கைமாத்து - கைம்மாறு.
2. தொறப்புக்குச்சி - திறவுகோல். (தொறக்கிறது ~ திறக்கிறது)
3. பசியாத்து - பசியாற்று
4. உறம்பற - உறவினன்
5. பழமை - கதை (என்ன பழமை பேசிக்கிட்டு இருக்கீங்க என்றால் என்ன கதை பேசிகிட்டு இருக்கீங்க என்று பொருள்)
நான் நகரத்திற்கு நகர்ந்த பின், இப்படி பல வட்டாரச் சொற்களையும் வட்டார மொழி நடையையும் இழந்துவிட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக