காலையில் வீட்டில் அபிராமி அந்தாதி ஒலித்துக் கொண்டிருந்தது, நான் சமைத்துக் கொண்டிருந்தேன். ஒரு பாட்டில் "முருகு சுவை" என்றே வர, Murug என்றால் ஹிந்தியில் chicken :) ஆஹா, பட்டர் காலையிலே பட்டர் சிக்கனை நினைவு படுத்துறாரே என்று சிரித்துக்கொண்டேன்.
அதே பாடலில் விசும்பு என்று, "முருகு சுவை"க்கு முன்னே வரும், பட்டர் சிக்கனில் லயித்த மனம் அந்த விசும்பிற்கு முன்னம் வந்த சொற்களை தவறவிட்டுவிட்டது.
விசும்பு - படித்த/தெரிந்த சொல் தான், ஆனால் பொருள் நினைவே வரவில்லை, திருக்குறளில் கூட வரும், குறளும் நினைவில் வரவில்லை, எவ்வளவு முயன்றும் பலன் இல்லை. ஒருவேளை "முருகு சுவையில்" ;) சிக்கிக்கொள்ளாமல் எல்லா சொற்களும் மனதில் பதிந்திருந்தால், பொருள் விளங்கியிருக்கும்.
வேலையெல்லாம் முடித்து விட்டு வந்து தேடிப் பார்த்தேன். இரு அருமையான திருக்குறள் இதோ -
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
சிந்தனையை தூண்டின அபிராமி அந்தாதி:
பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.
அதே பாடலில் விசும்பு என்று, "முருகு சுவை"க்கு முன்னே வரும், பட்டர் சிக்கனில் லயித்த மனம் அந்த விசும்பிற்கு முன்னம் வந்த சொற்களை தவறவிட்டுவிட்டது.
விசும்பு - படித்த/தெரிந்த சொல் தான், ஆனால் பொருள் நினைவே வரவில்லை, திருக்குறளில் கூட வரும், குறளும் நினைவில் வரவில்லை, எவ்வளவு முயன்றும் பலன் இல்லை. ஒருவேளை "முருகு சுவையில்" ;) சிக்கிக்கொள்ளாமல் எல்லா சொற்களும் மனதில் பதிந்திருந்தால், பொருள் விளங்கியிருக்கும்.
வேலையெல்லாம் முடித்து விட்டு வந்து தேடிப் பார்த்தேன். இரு அருமையான திருக்குறள் இதோ -
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
சிந்தனையை தூண்டின அபிராமி அந்தாதி:
பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக