வியாழன், 3 நவம்பர், 2016

திருக்குற்றால குறவஞ்சியும் திரைப்படப் பாடல்களும்

திருக்குற்றால குறவஞ்சியும் திரைப்படப் பாடல்களும்

இதை உரக்க படிக்கும் போது மனதில் வந்து போன திரைப்பட பாடல் வரிகள்:

#1.
கண்ணுக்குத் கண்ணிணை சொல்லத் திரிகூடக்      
    கண்ணுதலைப் பார்வையால் வெல்லப்
பெண்ணுக்குப் பெண்ம யங்கவே வசந்தவல்லி
      
பேடையன்னம் போலவே வந்தாள்.
                                                      [வசந்தவல்லி வருதல்]


பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

#2.
இந்திரை யோஇவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ                        
   மோகினியோ                           மன                   
முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய                        
    தோவெனவே                          உயர்                   
சந்திர சூடர் குறும்பல ஈசுரர் சங்கணி                       
   வீதியிலே                            மணிப்                   
பைந்தொடி நாரி வசந்தஒய் யாரிபொற்                          
   பந்துகொண்                        டாடினளே.
                                                    [வசந்தவல்லி பந்தடித்தல் ]


காதலன் படத்துல ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தியிருப்பார். பாடலுக்கும் காட்சிக்கும் சம்பந்தம் ஏதுமில்லை, ஆனாலும் கேட்டு ரசிக்கவைக்கும் பாடல்.


#3.


இடை சங்கதம் என்று [வசந்தவல்லி பந்தடித்தல் ]

இடையா அது இடையா அது இல்லாதது போல் இருக்குது

#4. 

முனிபரவும் இனியானோ-வேத

   முழுப்பலவின் கனிதானோ

கனியில்வைத்த செந்தேனோ-பெண்கள்

   கருத்துருக்க வந்தானோ

தினகரன்போற் சிவப்பழகும்-அவன்

   திருமிடற்றிற் கறுப்பழகும்

பனகமணி இருகாதும்-கண்டால்

   பாவையுந்தான் உருகாதோ


அன்பே நீயென்ன அந்த கண்ணனோ மன்னனோ; தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

#5.
         தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே அந்தத்

   தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே

பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன்

   பெண்மைகண்டுங் காயலாமோ வெண்ணிலாவே;  [வசந்தவல்லி நிலவைப் பழித்துரைத்தல்]

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை 

#6.
பெண்மைகண்டுங் காயலாமோ வெண்ணிலாவே;  [வசந்தவல்லி நிலவைப் பழித்துரைத்தல்]

இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ, நீ என்னைப் போல் பெண்ணல்லவோ.

#7.
வல்லைநிகர்முலை இல்லைஎனும்இடை

   வில்லை அனநுதல் முல்லைபொருநகை

வல்லிஎனஒரு கொல்லி மலைதனில்

   வல்லிஅவளினும் மெல்லி இவள்என

ஒல்லி வடகன டில்லி வரைபுகழ்

   புல்லி வருகுறி சொல்லி மதுரித

நல்ல பனிமலை வல்லி குழல்மொழிச்


   செல்வி புணர்பவர் கல்வி மலைக்குற; (வஞ்சி[குறிசொல்லும் குறத்தி வருதல்]

ஒல்லி பெல்லி :) :)

#8.
வளமைபெறுஞ் சதுரயுகம் கிழமைபோல் வழங்கும் (குறத்தி வசந்தவல்லிக்குத் தலமகிமை கூறுதல்)

ஒருகணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ (இப்பாடலில் நான்கு யுகங்கள் கூட நான்கு நாட்கள் போல இருக்குமாம், நாள் கழியவில்லையே என்று வெறுப்புத் தோன்றாது, இன்பமாக இருக்குமாம்)

#9. 
காமனார் தமக்கும்இவர் மாமனார் அம்மே!  (குறத்தி, திரிகூடநாதர் கினைச்சிறப்புக் கூறுதல்)
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு, மாமனுக்கோ காமன் மனசு 

1 கருத்து: