வியாழன், 1 செப்டம்பர், 2016

மொழிப்பற்று

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.....தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்றார் பாரதி.

அவருக்கு 32 மொழிகள் தெரியுமாம், இருப்பினும் தமிழே இனிமை என்றார்.

ஆனால் நமக்கு தமிழும் அரைகுறை ஆங்கிலமும் அரைகுறை (ஹே, நான் என்னைச் சொன்னேன் :)), இருப்பினும் தமிழர் இருவர் அலுவலகங்களில் பேசிக்கொள்வது ஆங்கிலத்திலேயே (பெரும்பாலும்), தொழிற்சார்ந்த பேச்சு இல்லாத போதிலும். நான் கூட இந்த வகையறா தான்.

இதே மற்ற மாநிலத்தவர்கள் (எ.கா. கன்னடம்/மலையாளம்/தெலுங்கு/ஹிந்தி பேசுபவர்கள்) தன் தாய்மொழியிலே பேசிக்கொள்வார்கள், மொழி தெரியாத மூன்றாம் நபர் இருப்பினும், தொழிற்சார்ந்த பேச்சின் ஊடும்.

அவர்களுக்கெல்லாம் இருக்கும் மொழிப்பற்று ஏன் நம்மிடம் இல்லை???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக