நான் மௌன போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் போதும் காதுகளை திறந்து தான் வைத்திருக்கிறேன். அது உனக்கு தெரியுமா?
~ * ~ * ~
அருகிருந்து பார்க்கும் போது பூதாகாரமாக தெரியும் சிறு புள்ளி, தூர வைக்கும் போது புலப்படாமல் போவது போலத் தான் உன் மீதான என் கோபங்களும்.
~ * ~ * ~
எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத நபர் என் துக்கங்களை பகிர்ந்துகொள்ளும் போதும் மனம் ஏனோ தான் எதிர்பார்த்த நபரையே தேடி அலைகிறது.
~ * ~ * ~
நிலையில்லாமல் தவிக்கும் மனம் எப்படியோ ஒரு சில நினைவுகளில் அப்படியே அடங்கிவிடுகிறது.
~ * ~ * ~
வார்த்தைகள் தீர்ந்து விட்ட கணங்களிலும் உன் மௌனத்தோடு மட்டும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறேன்.
~ * ~ * ~
அருகிருந்து பார்க்கும் போது பூதாகாரமாக தெரியும் சிறு புள்ளி, தூர வைக்கும் போது புலப்படாமல் போவது போலத் தான் உன் மீதான என் கோபங்களும்.
~ * ~ * ~
எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத நபர் என் துக்கங்களை பகிர்ந்துகொள்ளும் போதும் மனம் ஏனோ தான் எதிர்பார்த்த நபரையே தேடி அலைகிறது.
~ * ~ * ~
நிலையில்லாமல் தவிக்கும் மனம் எப்படியோ ஒரு சில நினைவுகளில் அப்படியே அடங்கிவிடுகிறது.
~ * ~ * ~
வார்த்தைகள் தீர்ந்து விட்ட கணங்களிலும் உன் மௌனத்தோடு மட்டும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறேன்.
~ * ~ * ~
### இது_கவிதை_இல்லை, காதல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக