வியாழன், 1 செப்டம்பர், 2016

உன்னோடான ஒவ்வொரு சண்டையிலும் ....

நான் மௌன போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் போதும் காதுகளை திறந்து தான் வைத்திருக்கிறேன். அது உனக்கு தெரியுமா?

~ * ~ * ~

அருகிருந்து பார்க்கும் போது பூதாகாரமாக தெரியும் சிறு புள்ளி, தூர வைக்கும் போது புலப்படாமல் போவது போலத் தான் உன் மீதான என் கோபங்களும்.

~ * ~ * ~

எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத நபர் என் துக்கங்களை பகிர்ந்துகொள்ளும் போதும் மனம் ஏனோ தான் எதிர்பார்த்த நபரையே தேடி அலைகிறது.

~ * ~ * ~

நிலையில்லாமல் தவிக்கும் மனம் எப்படியோ ஒரு சில நினைவுகளில் அப்படியே அடங்கிவிடுகிறது.

~ * ~ * ~

வார்த்தைகள் தீர்ந்து விட்ட கணங்களிலும் உன் மௌனத்தோடு மட்டும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறேன்.



~ * ~ * ~

### இது_கவிதை_இல்லை, காதல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக