புதன், 28 அக்டோபர், 2015

எட்டு மலை ஏழு கடல்

"ஏழு மலை ஏழு கடல் தாண்டி"ன்னு தானே நமக்கு தெரியும்.

இங்கே ஒருவர் "எட்டு மலை ஏழு கடல்"ன்னு பாடுறார். 
பன்னிருகை வேல்வாங்கப் பதினொருவர்
   படைதாங்கப் பத்துத் திக்கும்
நன்னவவீ ரரும்புகழ மலைகளெட்டும்
   கடலேழும் நாடி ஆடிப்
பொன்னின்முடி ஆறேந்தி அஞ்சுதலை
   எனக்கொழித்துப் புயநான் மூன்றாய்த் 
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக்
   குறவஞ்சித் தமிழ்தந் தானே.
                          - திருக்குற்றாலக் குறவஞ்சி
அதுவும் நீங்க எதிர்ப்பார்த்தே இராத இந்த கடலைகளைப்  பற்றி கேளுங்க.

கடல்கள் ஏழு - நன்னீர், உவர் நீர், பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு (கரும்பு)

https://ta.wikipedia.org/wiki/சொல்_(எண்_தொகை) கூட ஏழு மலைகளைத் தான் சொல்லுது.

இவர் சொல்லுற மலைகள் எட்டு - கைலை, மந்தரம் (பாற்கடலை கடைய மத்தாக பயன்பட்ட மலை), இமயம், விந்தம் (விந்திய மலை??), நிடதம் (நளமகாராஜாவுடைய நாடு - நிடதம் - இன்றைக்கு எந்த ஊரோ?), ஏமகூடம் (மேருமலை - குமரிக்கண்டத்தில் இருந்த மேருமலையின் தொடர்ச்சி இலங்கையில் இருக்கா? மேருமலையில் தான் சூரசம்ஹாரம் நடைப்பெற்றதாக கந்தப்புராணம் சொல்லிகிறதாம்), நீலமலை (நீலகிரி), கந்தமாதனம் (திருச்செந்தூர் கோயிலுக்கு வடக்கே உள்ள மலைன்னு சொல்லுறாங்க - இன்றைக்கு எந்த ஊர்?)



இந்த திருக்குற்றால குறவஞ்சி முருகன் பாட்டுல எனக்கு பிடித்த சொல்  - அஞ்சுதலை  -- அஞ்சுதல் (அச்சப்படுதல்) மற்றும் ஐந்து தலை. ஆஹா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக