புதன், 28 அக்டோபர், 2015

வெகுளி

வெகுளி என்ற சொல்லை "அப்பாவி / கபடம் இல்லாதவர் " என்ற பொருளில் தான் நாம் சாதரணமாக பயன்படுத்துகிறோம்/கேட்கிறோம்.
ஆனால் வெகுளி என்றால் கோபம்/சினம்.

         அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
         இழுக்கா இயன்றது அறம்.

இக்குறளை படிக்கும் போது, இங்கு ஏன் வெகுளி பயன்படுத்தப்பட்டிருக்குதுன்னு அறிய முற்பட்ட போது தான் இதன் பொருள் விளங்கிற்று. அது மட்டும் அல்ல, வள்ளுவர் வெகுளாமை பற்றி ஒரு அதிகாரமே எழுதியிருக்கிறார்.
வெகுளாமையில் நமக்கு நல்லா தெரிந்த குறள் ஒன்று இதோ:
        நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
        பகையும் உளவோ பிற. (வெகுளாமை - 304)


வெகுளின்னா அப்பாவின்னு எப்படி எப்போதிருந்து பழக்கத்தில் வந்தது. அப்படின்னா "அவர் ஒரு வெகுளி"ன்னு சொல்லுறது வஞ்சப் புகழ்ச்சி அணியா ???? smile emoticon

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக